திங்கள், 7 டிசம்பர், 2009

கருவறை

கருவறை

காமலீலைகளால் உருவாவது கருவறைகள் ...இன்று
கருவறைக்குள் உருவாகிறது காமலீலைகள் ....
ஆச்சாரம் அனுஷ்டானம் கோச்சாரம் எல்லாம்
இன்று அபட்சாரமாகிபோனது...

தமிழா ....

கருவறைக்குள் கவர்ச்சி நடிகையின்

சிலை வைத்து கோயில் கட்டிய உனக்கு..

பக்திப்பாடல்களில் கூட

பத்துபெண்களை விட்டு ஆடவிட்டால்தான்

பரவச நிலைஅடையும் உனக்கு
இதெல்லாம் என்ன ச்சும்மா .....

இராம. செங்குட்டுவன்


மக்கள் பணி
அவசர சிகிச்சை ஊர்தி உட்பட
அணைத்து போக்குவரத்தும் அரை மணி நேரம் முன்னாலேயே நிறுத்தப்பட்டு

கால் ஊனமுற்ற சிறுவனை, பள்ளி குழந்தைகளை

ரோட்டை கடக்க விடாமல் கால் கடுக்க நிற்க வைத்து
பலத்த பாதுகாப்புடன்?!?
கடந்து சென்ற
மந்திரி அன்று செய்த மகத்தான
மக்கள் பணி
ஓய்வு ........
இராம .செங்குட்டுவன்

செவ்வாய், 10 நவம்பர், 2009

நோ டீல்


வசதி படைத்தவர்களுக்கும் மேற்தட்டு மக்களுக்கும் மட்டுமே தேர்வு செய்து விளையாடும் டீல் நோ டீல் என்ற விளையாட்டு பொழுதுபோக்கு நிகழ்ச்சியை இப்போது சூர்யதொலைக்காட்சி ஒளிபரப்புகிறது .முற்றிலும் ஏழை எளிய மக்களும் நடுத்தர மக்களும் மட்டுமே பார்பதனால் வரும் வருமானத்தை ஆங்கிலம் பேச தெரிந்த மேற்தட்டு மக்களுக்கு மட்டும்இந்த விளையாட்டின் மூலம் லட்ச கணக்கில் பரிசாக தரும் இந்த தொலைக்காட்சிக்கு ஒரு பாமரனோ அல்லது ஒரு ஏழை விவசாயி கூடவா கிடைக்கவில்லை. நெடுந்தொடர்களை ஒளிபரப்பி முட்டாளாக்க மட்டும் இவர்களுக்கு ஏழை மக்கள் தேவை படுகிறார்கள் .கேள்வி கேட்டு பதில் சொல்லத்தான் இவர்களுக்கு படித்தவர்கள் தேவை.ஆனால் இந்த விளையாட்டில் ஒன்றிலிருந்து இருபத்தியாறுக்குள் ஒரு நம்பரை சொல்ல ஒரு ஊமையை கூட தேர்வு செய்யலாம் .இதில் கூடவா இவர்களுக்கு பாமர மக்களை தேர்வு செய்ய மனம் வரவில்லை .ஏழை பாழைகள் என்றும் முன்னேறி விட கூடாதென்று அவர்கள் முட்டாள்களாகவே எப்போதும் இருக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி செயல்படுவதில் தன் தாத்தாவை மிஞ்சி விடுவார்போல இந்த தொலைக்காட்சியின் உரிமையாளர் .

திங்கள், 12 அக்டோபர், 2009

நன்றி நவிலல்

(காதலிககு மட்டுமானது, மனைவிக்கு அல்ல )

என் அருமை காதலியே உனக்கும் உன் தந்தைக்கும் என் நன்றி !
ஒருவேளை நீ சமமதித்திருந்து

எதோ ஒரு கோயிலில்
நான்கு நண்பர்களுக்கு மத்தியில்
உன் கழுத்தில் நான் தாலி கட்டி இருந்தால் ,
அல்லது உன் தந்தை சம்மதித்திருந்து
எதோ ஒரு மன்டபத்தில்
ஊரைக்கூட்டி உன் கழுத்தில் நான் தாலி கட்டி இருந்தால்
அன்றோடு நம் காதலும் முடிந்து போயிருக்கும் ..
நல்லவேளை நீயும் சம்மதிக்காது உன் தந்தையும் சம்மதிக்காது

இன்று வரை நம் காதலை உயிர்போடு வைத்திருப்பதற்கு

என் அருமை காதலியே உனக்கும் உன் தந்தைக்கும் என் நன்றி !

திருட்டு திருமணத்திலோ அல்லது ஊர் அறிந்த திருமணத்திலோ முடிந்த காதல் .......

தாடி வைத்து திரிபவர்களிடமும் ,வேறொருத்திஉடன் திருமணபந்தத்தில் வாழ்ந்தாலும் மனதளவில் தன் காதலியின் நினைவுகளோடு வழ்பவர்களிடம்தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறது....

வெற்றிபெற்றதாக சொல்லும் காதலர்களிடம் காதல் தோல்வி அடைந்து விடுகிறது......

தற்கொலை செய்து கொள்ளும் காதலர்களோடு காதலும் செத்துபோகிறது ........

என்னோடு
என் காதலை இன்று வரை உயிர்போடு
விட்டு வைத்திருப்பதற்காக

என் அருமை காதலியே உனக்கும் உன் தந்தைக்கும் என் நன்றி !
மனைவியோடு சண்டை நேரங்களில்
வரும் மன உளைச்சலுக்கு பதில்

என் மனதில் தோன்றும்

உன்னுடன் பழகிய இனிமையான நினைவுகளால் மகிழ்ச்சி தான் வருகிறது

அதனால் மனைவி உடன் சண்டையை எதிர்பார்த்து ஏங்க வைத்த என் அருமைக்காதலியே உனக்கும் உன் தந்தைக்கும் என் நன்றி !

கவிதை & ஓவியம்

இராம.செங்குட்டுவன்

வெள்ளி, 24 ஜூலை, 2009

இலங்கைக்கு உதவ வேண்டாம் - எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு சீமான் எச்சரிக்கை


சிங்களர்களை வளப்படுத்துவதற்காக தமிழக நிலங்களை மேம்படுத்த எம்.எஸ்.சுவாமிநாதனைப் பயன்படுத்த இலங்க முயல்கிறது. எனவே எம்.எஸ்.சுவாமிநாதன் இலங்கை செல்லக்கூடாது. மீறி அவர் சென்றால் சென்னையில் உள்ள சுவாமிநாதனின் வீடு மற்றும் அவரது அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று இயக்குநர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் சீமான் பேசியதாவது: இலங்கை அரசு வடக்கில் வசந்தம் என்ற பெயரில் குழு ஒன்றை அமைத்து பாதிக்கப்பட்ட தமிழர்களை மீண்டும் அவர்களது பூர்வீக பகுதியில் குடியமர்த்தப் போவதாக கூறி உள்ளது. ஆனால் இதுவரை தமிழர்கள் யாரும் குடியமர்த்தப்படவில்லை. சிங்கள ராணுவ, போலீசார் குடும்பத்தினரும் நிர்வாகத்தில் உள்ள சிங்களர்கள்தான் குடியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதற்காக இந்தியா வழங்கிய ரூ.500 கோடியையும் தமிழக அரசு கொடுத்த ரூ.100 கோடியையும் சிங்கள அரசு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. எனவே இந்திய, தமிழக அரசுகள் இந்த நிதி உதவியை நிறுத்தி வைக்க வேண்டும். இலங்கை வடக்கில் தமிழர் பகுதிகளில் 1 லட்சத்து 25 ஆயிரம் சிங்களர்களை குடியமர்த்த திட்டமிட்டுள்ளனர். புலம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும் அவர்கள் வசித்த இடத்தில் வீடு கட்டி கொடுக்காமல் சிங்கள அரசு சொல்லும் இடங்களில் வசிக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.19 பேர் கொண்ட இலங்கை குழுவில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேயின் 2 தம்பிகள், 8 ராணுவ அதிகாரிகள் உள்பட அனைவரும் சிங்களர்கள். ஒரு தமிழர் கூட இல்லை. இந்த குழுவா தமிழர்களுக்கு வசந்தமான வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்கப்போகிறது? இதை இந்திய அரசும், தமிழக அரசும், சர்வதேச சமூகமும் தட்டிக்கேட்க வேண்டும். கடந்த ஜூன் மாதம் வரை அடுத்த நாட்டு விவகாரத்தில் எப்படி தலையிடுவது என்று கேள்வி எழுப்பிய மத்திய அரசு ரூ.500 கோடி கொடுத்தது வேடிக்கையானது. இந்த தொகையை வைத்துதான் கண்ணி வெடிகளை அகற்ற சிங்கள அரசு ஏற்பாடு செய்து வருகிறது. நெற்களஞ்சியமான கிளிநொச்சி, மன்னார் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விளை நிலங்களை சிங்களர்களுக்கு தாரை வார்த்து கொடுக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள விவசாய நிலங்களில் விவசாய புரட்சி ஏற்படுத்துவதாக கூறி தமிழக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதன் இலங்கை சென்று ராஜபக்சேயை சந்தித்து பேசி உள்ளார். முழுமையான விவசாய திட்டங்களை செயல்படுத்த மீண்டும் எம்.எஸ்.சுவாமிநாதன் இலங்கை செல்லப் போவதாக அறிந்தோம். இதனால் சிங்களர்கள்தான் பயன் அடைவார்களே தவிர தமிழர்களுக்கு எந்த பலனும் கிடைக்கப் போவது இல்லை. தமிழர்கள் அனைவரும் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எப்படி விவசாயம் செய்வார்கள்? இது சிங்களர்களை வளப்படுத்தும் முயற்சி. எனவே எம்.எஸ்.சாமிநாதன் இலங்கை செல்லக்கூடாது. விவசாயப் புரட்சிக்கான திட்டங்களையும் அவர் வழங்கக்கூடாது. இதை மீறி அவர் இலங்கை சென்றால் தமிழ் உணர்வுள்ள மக்களை ஒன்று திரட்டி சென்னையில் உள்ள எம்.எஸ்.சாமிநாதனின் வீடு மற்றும் அவரது அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். எம்.எஸ்.சாமிநாதன் தமிழர்கள் உணர்வை மதிப்பார் என்று நம்புகிறோம் என்றார் சீமான்.

புதன், 22 ஜூலை, 2009

அப்துல் கலாம் எனும் ஒரு தமிழருக்கு நேர்ந்த அவமானம்..


மும்பை விமான நிலையத்தில் காண்டினெண்டல் ஏர்வேய்ஸ் என்ற விமான நிறுவனம் பாதுகாப்பு சோதனை என்ற பெயரால் நமது முன்னாள் ஜனாதிபதி டாக்டர்அப்துல் கலாம் அவர்களை அவமானப்படுத்தி உள்ளது.... காங்கிரெஸ்

ஆட்சியில் ஒரு சாதரண தமிழனுக்கு நடந்த அவலங்கள் போய் இப்போது ஒரு முன்னாள் ஜனாதிபதி என்ற மரியாதையை கூட தர வேண்டாம் ...குறைந்த பட்சம் நமது நாட்டு பாதுகாப்பிற்கு ஏவுகணைகளை தயாரித்து கொடுத்த ஒரு மூத்த விஞ்ஞானி என்ற முறையிலாவது அவருக்கு இந்த அவமானம் அதுவும் நமது நாட்டிலே நடந்திருக்ககூடாது .....இதற்கு ஒட்டு மொத்ததமிழர்களும் தனது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்....

வெள்ளி, 17 ஜூலை, 2009

முரண்பாடுகள்


ஆலமரத்து விழுதில் ஆடிய ஆகாய ஊஞ்சல் .....

அறுபதடி கினற்றில் மேலிருந்து அடித்த அந்தர் பல்டி....

ஆளுயர சணப்பை வயலில் நாள் முழுக்க கண்ணாமூச்சி...

தெருகூத்து பார்க்க போட்ட முதல் வரிசை சண்டை ....

விடிய விடிய சாமி ஊர்வலத்தில் யார் வீட்டு திண்ணையிலோ தூக்கம் ....

கூத்தில் கோமாளிக்கு போட்ட தவக்களை மாலை...

கனவில் வந்து மிரட்டிய தெருகூத்து சூரன்...

தினமும் சிகெரெட்வாங்கி வர அப்பா கொடுத்த காசின் மீதியில் வாங்கி சாப்பிட்ட கமர்கட் ,தேன் முட்டாய்...

காசு முட்டாய் வாங்கி சப்பியத்தில்
தெரிந்த பத்து காசின் மகிழ்ச்சி...

ஓணானை பிடித்து உயிருடன் புதைத்து
மறுநாள் தோண்டி கிடைக்காத காசின் ஏமாற்றம்... .

மணிக்கு ஐந்து ரூபாய் கொடுத்து கற்று கொள்ள
வாடகைக்கு எடுத்து வந்த குட்டி மிதிவண்டி ....


மிதிவண்டி கற்றுகொள்ளும்போது இடுப்பை வளைத்ததில்
அண்ணனிடம் முதுகில் வாங்கிய குத்து..


எல்லார் வீட்டிலிருந்தும் ஒரு பொருளை கொண்டு
செய்து சாப்பிட்ட கூட்டாஞ்சோறு ....

பனை ஏறி நுங்கு பெரிக்கையில் மரத்துக்காரன் சத்தம் கேட்டு
குதித்து ஓடியவனை காலிடறி விட்டு ஓடிய நண்பன் ......

மரமேறி மாங்காய் பெரிக்கையில்
கால்சட்டையை சொரட்டு கோலால் மாட்டி இழுத்த தோப்புக்காரன் .....

களத்துமேட்டில் அப்பாவுக்கு சாப்பாடு கொடுத்து திரும்புகையில் மிதிவண்டியோடு தூக்கி அடித்த சூறைக்காற்று....

மாட்டு பொங்கலன்று பலூனை ஊதி சைக்கிள் மர்கார்ட் கம்பியில் சுறுட்டி கட்டி

டர்ர்ர் சத்தத்துடன் சுற்றிவந்த ஊர்வலம்...


யாரோ தூக்கு போட்டு தொங்கிய ஆலமரத்தை கடக்கும்போது உரக்க பாடிய பக்தி பாட்டையும் மீறி வரும் பயம்...

வைகுண்ட ஏகாதசி அன்று அத்தையுடன் டூரிங் டாக்கிசில்

விடிய விடிய பார்த்த ஒரே டிக்கெட்டில் நான்கு பக்தி படங்கள் ....

அடிக்கடி நான் அடம்பிடித்து பாட்டி செய்து கொடுக்கும்

கேழ்வரகு இனிப்பு அடை ...

அம்மா இடித்தபின் உரலில்

ஒட்டிஇருந்த சூடான இட்லி கொண்டு தொட்டு சாப்பிட்ட மிளகாய் பொடியின் சுவை ...

பள்ளிக்கூடம் போகாமல் போக்கு காட்டியவனை

துரத்தி துரத்தி அப்பா கொடுத்த துடுப்பு அடி....

திருக்குறள் சொல்லாதவனை ரத்தம் வர காதை திருகிய வாத்தியாரை
மறுநாள் உண்டிகல்லால் அடித்து ரத்தம் வரவைத்து
அன்றோடு பள்ளிக்கூடத்தை மறந்த என் நண்பன்....

எப்படி கன்டிப்பேன்? என் பால பருவத்தில்
பந்தம், பாசம், நட்பு,சொந்தம்,பகை, பக்தி, விளையாட்டு
என்று எல்லாமும் அனுபவித்துவிட்டு இடம்பெயர்ந்த
என் நகரத்து ஒன்டிகுடித்தன வாழ்கையால்
பால பருவத்தை எட்டுக்கு எட்டு சுவற்றுக்குள்
எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு பள்ளிக்கூடம் போக மறுக்கும்
என் மகனை ?

இராம.செங்குட்டுவன்

திங்கள், 13 ஜூலை, 2009

புதன், 8 ஜூலை, 2009

மின்னஞ்சலில் உலவும் சுனாமி வதந்தி




என் மின்னஞ்சல் முகவரிக்கு சமிபத்தில் வந்த ஒரு மின்னஞ்சலில் வரும் ஜூலை 22 ஆம் தேதி அன்று சுனாமி வரபோவதாகவும் ,அதற்கு ஆதாரமாக
சூரிய கிரகணத்தை காரணம் காட்டி ஒரு அறிவியல் பூர்வ விளக்கமொன்றையும்
அனுப்பி உள்ளனர்...மேலும் ஜூலை மாதம் முழுவதும் கடற்கரை பகுதியிலிருந்து தள்ளியே இருக்கும்படியும் , தங்கள் நண்பர்களுக்கும் இந்த மின்னஞ்சலை அனுப்பி வைக்கும்படியும் அறிவுரை கூறிஉள்ளது ....
இயற்கை என்றுமே மனித அறிவுக்கு எட்டிய பேரழிவை மனித குலம் தோன்றிய நாள் முதல் நிகழ்த்தியதில்லை என்பதை இந்த அறிவு ஜீவிகள் எப்போதுதான் உணருவார்களோ தெரியவில்லை...
கிழே எனக்கு வந்த மின்னஞ்சலின் சுருக்கம் ....

Quake and Tsunami Predicted on July 22 2009
Hello there. I just wanted to let you know that please stay away from the beaches all around in the month of July. There is a prediction that there will be another tsunami or earthquake hitting on 22 July 2009. It is also when there will be sun eclipse. Predicted that it is going to be really bad and countries like Malaysia (Sabah & Sarawak), Singapore, Maldives, Australia, Mauritius, Sri Lanka, India, Indonesia, Philippines are going to be badly hit. Please try and stay away from the beaches in July. Better to be safe than sorry. Please pass the word around. Please also pray for all beings.
Quake and Tsunami Predicted 22 July 2009
The eclipse quake theory is as follows, When the gravitational force of the sun and moon are both pulling on a plate that has not had series of recent earth quakes, the extra pull is all that is needed to "pop the seam" and cause a major quake.
Japans tectonic plates 6+ Magnitude Quake on 22 July 2009 at 3:00 pm Local Japanese time. This will be follower by two level 5+ Earthquakes and a Tsunami between 5:00 pm and 7:00 pm. The tsunami will start out in the pacific ocean (to the South East of Japan ... Along the fault line) and hit all the islands to the south west of Japan, Indonesia and even reach New Zealand. The major quakes will actually be along the fault lines in the Ocean. The theory that the gravitational pull of the Sun and Moon pulling together will do the following things. 1. Lift the tectonic plates
2. Cause the tide to rise more than usual 3. Cause an underground molten magma tide to dip and raise the plates following the water tide. Taken all the time data from the Nasa eclipse site into an excel spread sheet four the four tectonic plates in the region. Assumed an hour delay for each event following the lunar eclipse, and then summed the values. I assumed that the events would last longer for the fluids, water and molten magma than for dry land. And then summed the values four all 4 plates where Japan sits.

செவ்வாய், 7 ஜூலை, 2009

இதுவும் கேயாஸ் தியரி தான் .....

பாதிக்கு பாதி தண்ணி கலந்து
பால் வித்த காச கொண்டு
பழம் வாங்கலாம்னு பால்காரன்
பழகடைக்கு போனானாம் ..
மெழுகால மெருகேத்தி
பவுடரால பழுக்கவச்ச பழத்த
பால்காரனுக்கு வித்த பழகடைக்காரன்
மளிகை சாமான் வாங்கலாம்னு
மளிகை கடைக்கு போனானாம் .....
கடுகிலேர்ந்து பருப்பு வரைக்கும்
கலப்படம் பண்ண மளிகை சாமான
பழகடக்காரனுக்கு வித்த மளிகை கடக்காரன்
சாப்பிடலாம்னு ஓட்டலுக்கு போனானாம் ..
மாட்டு கறிய கோழி கறின்னு சொல்லி
மளிகை கடைக்காரனுக்கு வித்த ஓட்டல்காரன்
ஒடம்பு சரிஇல்லேன்னு
மருத்துவரு கிட்டே போனானாம் ...
ஒன்னு இல்லாத ஓட்டல் காரன் ஒடம்புக்கு
எல்லாம் சோதனையும் எழுதி கொடுத்து
ஏமாத்தி வைத்தியம் பார்த்த மருத்துவரு
சாமி கும்பிடனம்னு கோயிலுக்கு போனானாம்...
வரிசையில நிக்கற ஜனங்கள ஒதுக்கி
நேரா கருவறைக்கே கூட்டி சென்று
மருத்துவரு கழுத்துல மாலய போட்டு
தட்டு நிறைய காச பார்த்த ஐயரு
தயிரு வாங்கனும்னு
பால்காரன்கிட்டே போனானாம் ..
பாதிக்கு பாதி தண்ணி கலந்த பால் வித்த........
இருங்க ஆரம்பிச்ச இடத்துக்கே வந்தாச்சு ....
ஆரம்பிச்ச இடத்துல முடிக்கிறதால, இது கேயாஸ் தியரி இல்லை ..
பால்காரனுக்கும் மருத்துவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும்
பால்காரன் ஏமாற்றி சம்பாதித்த பணம்
மருத்துவர் ஏமாற்றி சம்பாதித்த பணமாக மாரியதில்தான்
இருக்கு கேயாஸ் தியரி .......

இராம . செங்குட்டுவன்.

திங்கள், 6 ஜூலை, 2009

குஷ்பூ - கருணாநிதி சந்திப்பு- செய்தி

மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த
இந்த சந்திப்பின் மூலம் இலங்கை தமிழர்களின் துயர் உடனடியாக துடைக்கப்படும் என்றும், காவிரியில் உடனடியாக 105 டி .எம் .சீ தண்ணீர் திறந்து விடவும் , ஒக்கேனேகள் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு தடை இல்லை என்று கருநாடக அரசு உத்தரவு இடும் என்றும் , முல்லை பெரியார் அணை உயரத்ததை 148 அடியாக உயர்த்திட கேரளா அரசு சம்மதிக்கும் என்றும் ,பாலாற்றின் குறுக்கே அணை கட்டமாட்டோம் என்று ,ஆந்திர அரசு அறிவிக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள் .

ரெம்ப்ப முக்க்க்க்கியம் ......போங்கடாங்.......!

புதன், 1 ஜூலை, 2009

இன்று ஒரு குறுஞ்செய்தி( s.m.s)

___________________________


நீ என்ன அழகு தேவதையா ?

உன்னை பார்த்த உடன்

அனைத்தும் மறந்து விடுகிறதே ?

இப்படிக்கு தேர்வு கூடத்தில் உட்கார்ந்து

கேள்வித்தாளை பார்த்து

ஹைகூ எழுதுவோர் சங்கம்.

எங்களுக்கு எல்லா கல்லூரிகளிலும் கிளைகள் உண்டு...



செவ்வாய், 23 ஜூன், 2009

உணர்வுக்கு ஏது தடை ?

இருபது -இருபது
உலககோப்பை
இறுதிபோட்டி
எதிரி நாடே ஆனாலும்
இலங்கையை பாகிஸ்தான் வெல்ல
எல்லா தமிழ் உள்ளங்களும்
வேண்டிக்கொண்டதை
எது தடுக்கும்?
ஆஸ்த்ரேலியாவில் இந்தியர்கள்
அடிமேல் அடிவாங்க காரணம்
இந்தியர்கள் மீதான இனவெறியாம்.
அப்படியென்றால்
இலங்கையில் நடந்தது என்ன பங்காளி சண்டையா?

இன்றைய உணவே மருந்து

தினமும் காலை வெறும் வயிற்றில் தேனில் ஊறவைத்த பேரிசம்பழம் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள ரததட்டுக்களின் (Platelet) எண்ணிக்கை அதிகமாகும் .

திங்கள், 22 ஜூன், 2009

நெடுந்தொடர்கள் - ஒரு பார்வை


எல்லா தொலைக்காட்சிகளிலும் (மக்கள் தொலைக்காட்சி தவிர்த்து ) ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்கள் , நாள் முழுவதும் அலுவலகத்தில் மன ரீதியாகவும் , உடல் ரீதியாகவும் உழைத்துவிட்டு திரும்பும் ஆண்மகன் களின் மன உளைச்சலுக்கு மிக பெரிய காரணமாக உள்ளது...

டி .ஆர்.பீ ரேடிங் என்று ஒரு மோசடியான தரக்குரியீட்டை வைத்து கொண்டு தொலைக்காட்சிகள் செய்யும் இந்த சமூக சீர்கேட்டை யார்தான் கட்டுப்படுத்துவது... சினிமாவிர்க்காவ்து சென்சார் சான்றிதழ் உண்டு..

குடும்பப்பெண்கள் இப்போது எத்தகைய மோசமான நெடுந்தொடர்களையும் பார்க்க தயாராக இருக்கிறார்கள் . .

இதில் கொடுமை என்னவென்றால் நல்ல வாசகர்கள் ,nadunilamaiyaana திரை விமர்சனம் என்று பெயரெடுத்த ஒரு பத்திரிக்கை குழுமத்திடமிருந்து ஒரு மோசமான ,ஒரு நெடுந்தொடர் எப்படியெல்லாம் இருக்ககூடாதோ அப்படியெல்லாம் எடுத்து தொடர்ந்து ஆறு வருடங்களாக ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கிறது..இதில் இந்த பத்திரிக்கை புதிதாக வெளிவரும் படங்களுக்கு திரை விமர்சனம் என்ற பெயரில் மதிப்பெண் வேறு வழங்கிக்கொண்டு இருக்கிறது....

நெடுந்தொடர் ஏற்படுத்தும் சமூக சீர்கேடுகள்

---------------------------------------------------------

நெடுன்தொடர்களால் நமது குடும்ப பெண்கள் மிக பெரிய மன மாற்றத்தை சந்தித்து வருகிறார்கள்...அருகில் வசிக்கும் பெண்களுடன் பழகுவதை அடியோடு

நிருத்திகொன்டார்கள்..

மிக முக்கிய பிரச்னையாக தனது குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தையும்

குறைத்து விட்டார்கள் .இதனால் குழந்தை வளர்ப்பிலும் .குழந்தைகள் மன நிலையிலும் மாறுதல் ஏற்பட்டிருக்கிறது ..

ஒரு நண்பர் வீட்டிற்கு சென்ற நேரத்தில் அவர்களின் குழந்தை தன் அம்மாவிடம் எதோ சொல்ல முயல ஆனால் இருவரும் நெடுன்தொடரிலேயே மூழ்கி இருந்தனர் .அந்த குழந்தை தன் அம்மாவின் முகத்தை கையால் திருப்பி "என் முகத்தை பார்த்து பேசும்மா " என்று சொல்ல அதற்க்கு குழந்தையின் அம்மா "நாடகத்தில் முக்கியமான காட்சி வரும்போது ஏன் என் உயிரை வாங்குகிறாய் ?"

என்று அடித்துவிட்டார்கள்..எனக்கு மிகுந்த மன வேதனையை தந்த சம்பவம் இது.குடும்ப பெண்களுக்கு குழந்தை வளர்ப்பை விட இப்போது நெடுந்தொடர்களின் கதை முக்கியமான ஒன்றாக ஆகிவிட்டது..

இந்த நெடுந்தொடர்கள் நமது சமூகத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்பதை இனி வரும் காலம் தான் பதில் சொல்லும்..ஆனால் அந்த பதில் நல்ல பதிலாக இருக்காது என்பது நிச்சயம் ...

இராம .செங்குட்டுவன் .

____________________

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்



சுவாமி விவேகானந்தரைப் பற்றி அறியாமல் யாரும் இருக்கமுடியாது. அவர் ஒரு வீரத்துறவியாவார். அவரது பொன்மொழிகள் அர்த்தம் மிகுந்தவை. அவற்றில் பொதுவாக அவர் கூறிய சில பொன்மொழிகளைப் பார்க்கலாம்.பொதுவான பொன்மொழிகள்:-* இருதயம் விரிவடைந்துள்ள இடத்தில்தான் உண்மை ஞானம் உதிக்கும். அந்த உண்மை ஞானம்தான் நம்பிக்கை.* அடக்கப்படாமல் உள்ள மனமும், அறவழியில் செலுத்தப்படாத மனமும் நம்மை எப்போதும் கீழ் நோக்கியே இழுத்துச் சென்று அழித்துவிடும். அடக்கப்பட்ட மனமும், அறவழியில் செல்லும் மனமும் நமக்குப் பாதுகாப்பை அளித்திடும். உலகபந்தங்களில் இருந்து விடுதலையளிக்கும்.* கபடம் இல்லாத நாத்திகன் வஞ்சகனை விடச் சிறந்தவன் ஆவான்.* காமம், பொன்னாசை இவைகளால் ஆளப்படும் அற்பர்கள் பொருட்படுத்தப்படக்கூடியவர்கள் அல்லர்.* எவர் ஒருவருடைய நெஞ்சு ஏழை மக்களுக்காகத் துயரத்தில் அழுமோ, அவரையே நான் மகாத்மா என்பேன்.* அன்பு நெறியிற் சென்று உலகம் உய்வடைந்திட வழிகளைக் கூறும் முறை மதம் எனப்படும்.* கோழைகளே பாவ காரியங்களைப் புரிந்திடுவர். தைரியமுடையோர் ஒருக்காலும் பாவம் செய்யார்.* பலமற்ற மூளையில் நாம் எதையுமே செய்ய இயலாது. அதனால் நாம் அதைப் பலப்படுத்த வேண்டும்.* அச்சமே நமக்குத் துயரத்தைத் தருவது. அச்சமே கேட்டை விளைவிப்பது. அச்சமே மரணத்தைத் தருவது. நமது உண்மை இயல்பை நாம் அறிந்து கொள்ளாமல் இருப்பதனால்தான் நமக்கு அச்சம் ஏற்படுகின்றது.* இவ்வுலகில் பிறந்த நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுக்கும் மரங்கள் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமற் போய்விடும்.* முதலில் வேலைக்காரனாயிருக்கக் கற்றுக் கொண்டால், எஜமானாகும் தகுதி பின்னர் தானாகவே வரும்.* அன்புடையவனே வாழ்பவன். சுயநலமுடையவனோ செத்துக் கொண்டிருக்கின்றான் என்றே பொருள்.* சேர்ந்து வாழ்தலே சிறந்த வலிமையாகும்.* எந்த வேலையாக இருந்தாலும் அதைத் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவனே அறிவாளியாவான்.* தன்னை அடக்கப் பழகிக்கொண்டவன் வேறு எதற்கும் சிக்கமாட்டான். அத்தகைய தகுதி உள்ளவனே உலகில் நன்றாக வாழத் தகுதியுள்ளவன்.* பலமே வாழ்வு, பலவீனமே மரணம்.* தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இவை மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்துக்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.* உறுதியுடன் இரு, அதற்கு மேலாகத் தூய்மையானவனாகவும், முழு அளவில் சிரத்தை உள்ளவனாகவும் இரு.

செவ்வாய், 16 ஜூன், 2009

இன்றைய உணவே மருந்து

கொள்ளு

கொள்ளை பொன்னிறமாக வறுத்து அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து நன்றாக மாவு போல அரைத்துகொள்ளவும்.தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு வாயில் போட்டுகொண்டு வெதுவெதுப்பான சுடுநீர் குடிக்கவும்.இப்படி அறுபது நாட்கள் செய்து வர உடலில் தேவையற்ற கொழுப்புகளை நீக்கி உடல் ஆரோக்கியம் பெரும்.
-இராம .செங்குட்டுவன்

இன்று ஒரு செய்தி


கன்னியாகுமரியில் கடல் சீற்றம்.


இன்று ஒரு கிசு-கிசு


ஹீரோயின் விஷயத்தில் மூக்கை நுழைக்காத சில நடிகர்களில் தல-யும் ஒருவர். ஆனால் ஒருவரை மட்டும் ஹீரோயினாக போட வேண்டாம் என இயக்குனர்களிடம் அன்பாக கேட்டுக் கொண்டுள்ளார். பூம்பாவாய் ஆடிப்பாடிய அந்த ஆம்ப‌ல், கறுப்பு காமெடியின் புராண படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியது தல-க்குப் பிடிக்கவில்லை. காரணம் கறுப்பு காமெடிக்கும் தல-க்கும் ஆகாது. அவருடன் ஒரு பாடலுக்கு ஆடியவரை எப்படி நமது படத்தில் ஹீரோயினாக்குவது என்பதுதான் இந்த நிபந்தனைக்கு காரணமாம். ஈகோ இல்லாத தலை மண்ணில் ஏது?

இன்று ஒரு கவிதை


கூண்டுகிளிக்கு பிறந்த

குஞ்சு கிளிக்கு

எப்படி? ஏன்?

வந்தன சிறகுகள் ....
-கல்யாண்ஜி

புதன், 6 மே, 2009

மாற்று சிந்தனைகள் - இராம.செங்குட்டுவன்




'அற்புதம்' 'பிரமாதம்' என்றார் அப்துல் கலாம்.இந்த வார்த்தைகளை கலாம் அடிக்கடி சொல்லகூடியவர்தான் ஆனால் சொன்ன இடமும் ,நேரமும் தவறாக பட்டது பக்கத்திலிருந்த சக விஞ்ஞானிக்கு ,


இடம் :- ஸ்ரீகரிகோட்டா


நேரம் :- பீ. எஸ் .எல்.வீ ராக்கெட்ஏவப்பட்டு சில மணித்துளிகளில் கடலில் விழுந்த நேரம்


ஆனால் 'அற்புதம்' 'பிரமாதம்' என்று அப்துல் கலாம் அப்போது சொன்னதற்கான அர்த்தத்தை அந்த சக விஞ்ஞானி மற்றொரு இடத்தில் அதே வார்த்தைகளை அவரே மீண்டும் சொன்னபோதுதான் புரிந்து கொண்டார் .எப்படி?


இடம் :- ஒரிஸ்ஸா ஏவுகணைத்தளம்
நேரம் :- அக்னி ஏவுகனை வெற்றிகரமாக விண்ணில் பரந்த நேரம்.


அப்துல் கலாம் அவர்களுக்கு ஏற்பட்ட மாற்று சிந்தனைதான் முதலில் ஏற்பட்ட தோல்வியை இரண்டாவது வெற்றியாக மாற்றியது. எப்படி? பீ.எஸ்.எல் .வி ராக்கெட் ஏவப்பட்டு இரண்டாயிரம் கிலோ மீட்டர் மேலே சென்று தன வெடித்து சிதறியது கடலில் விழுந்தது..அப்துல் கலாம் அற்புதம்,பிரமாதம் என்று சொன்னதற்கான காரணம், ஏன் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாட்டிலைட்டுக்கு பதிலாக வெடி பொருட்களை பயன்படுத்தி இரண்டாயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்க கூடிய ஏவுகனை தயாரித்தால் என்ன? என்று அவருக்கு முதலில் தோல்வியில் தோன்றிய மாற்று சிந்தனைதான் அக்னி ஏவுகனை இன்று நமது நாட்டின் ராணுவத்தின் வெற்றிக்கு பலமாக இருக்கிறது..அதனால் நண்பர்களே மாற்று சிந்தனைகளை உருவாக்குங்கள்..வெற்றிக்கான கதவு திறந்தே இருக்கும்...








செவ்வாய், 5 மே, 2009

உங்கள் வாழ்வில் மாற்றம் தரும் மூன்று சக்திகள்


மரபின் மைந்தன் ம .முத்தையா
உங்களையே நீங்கள் கேட்டுப் பார்க்க வேண்டிய கேள்வி இதுதான். உங்களால் ஆளுமைமிக்க மனிதராக விளங்க முடிகிறதா? இந்தக் கேள்வியைப் படித்தவுடனேயே உங்கள் நண்பர்கள் - உங்களுக்கு வேண்டியவர்கள் - உங்களைப் பற்றிச் சொல்லும் பாராட்டு மொழிகளும், உங்களுக்குக் கீழே பணிபுரிபவர்கள் உங்களிடம் காட்டும் பணிவும் உங்கள் நினைவுக்கு வரும். “ஆமாம்! நான் ஆளுமைமிக்க மனிதர்”தான் என்று ஒரு குரல் உள்ளே எழும். இவை, உங்களுக்குள் இருக்கும் ஆளுமைப்பண்பின் ஆரம்ப அறிகுறிகள்தான்.
இதுவரை சந்தித்திராத ஒரு மனிதரைப் பார்க்க நேர்கையில், பழகத்தொடங்கி பத்து நிமிஷங்களுக்குள் அவரை உங்களால் ஈர்க்க முடிகிறதென்றால், உங்கள் ஆளுமைப்பண்பு தீர்க்கமாக இருப்பதாய்ப் பொருள்.
அறிமுகமான வட்டத்தில் மட்டுமன்றி, உங்களுடன் பழக நேர்கிற மூன்றாம் மனிதருக்கோ, உங்கள் பணிகளைப் பற்றிக் கேள்விப்படுகிற புதியவர் ஒருவருக்கோ, உங்கள் மீது வியப்பு கலந்த பிரியமோ - மரியாதையோ தோன்றுமேயானால், அதுதான் உங்கள் ஆளுமைப் பண்பின் அழுத்தமான அடையாளம்.
இந்த ஆளுமைப்பண்பு வளர்கிறபோது, உங்கள் வருகை எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. உங்கள் வார்த்தைகள் மற்றவர்களால் ஏற்கப்படுகின்றன. உங்களைத் தவிர்க்க நினைப்பவரும், உங்கள்பால் ஈர்க்கப்படுகிறார்.
“அப்படியா! இதற்கு மந்திர சக்தி எதுவும் வேண்டுமா?” என்று நீங்கள் கேட்கலாம். இது மந்திர சக்தியல்ல. இதற்குத்தான் மனித சக்தி என்று பெயர்.
இந்த அபரிதமான சக்தியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென்றால், என்னென்ன வேண்டும் என்பதைப் போலவே, என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதும் முக்கியம்.
பலபேர் ஆர்ப்பாட்டமாகப் பேசுவதும் ஆரவாரமாக நடந்துகொள்வதும் ஆளுமை என்று நினைத்துக் கொள்கிறார்கள். உண்மை என்னவென்றால், அப்படி நடந்துகொள்ளக்கூடிய மனிதருக்கு ஒரேயொரு ரசிகர்தான் இருப்பார். அந்த ரசிகர் அவரேதான். பொருத்தமில்லாமல் துருத்திக்கொண்டிருக்கும் காரணத்தாலேயே விலையுயர்ந்த முந்திரிகூட, “முந்திரிக்கொட்டை” என்ற வசவுச்சொல்லை வாங்கிக் கட்டிக்கொள்கிறது.
உங்கள் செல்வமோ - செல்வாக்கோ - சிறப்புப் பட்டங்களோ - பொது இடங்களில் உங்களாலேயே வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டால், அவற்றுக்கும் மதிப்பிருக்காது. நீங்களும் மதிப்பிழக்க நேரிடும்.
உங்கள் ஆளுமையை வலிமையாக வெளிக்காட்டப் போவது, உங்கள் பணிகளும் பணிவும் மட்டும்தான். வலிமைமிக்க மனிதர் எளிமை மிக்கவராய் விளங்கும்போதுதான் அவர் இருக்கும் இடமே அவரின் தாக்கத்தை உணர்கிறது. அவரைக் கூர்ந்து கவனிக்கிறது.
ஆர்ப்பரித்து வருகிற காட்டு யானையைக் கண்டால் மிரண்டு விலகுகிற மனிதன், கோவில் யானையைக் கண்டால் அருகில் சென்று ஆசீர்வாதம் வாங்குகிறானே….. இது ஏன்?
வலிமை மிகுந்த யானை பணிவின் வடிவமாய் கட்டுப்பட்டு நிற்பதுதான் காரணம். இதற்கு உளவியல்பூர்வமான காரணம் ஒன்றும் இருக்கிறது. தன்னுடைய நிலையில் மனிதன் உயர்கிறபோது, அவனிடம் இனிமையான இயல்பான பண்புகள் இருக்காது என்கிற கணிப்போடுதான், சராசரி மனிதன் சாதனையாளர்களை நெருங்குகிறார். விறைப்பான முகம், புதைந்து போன புன்னகை - அதைவிட வேகமாய் சில சமயம் வெளிப்படும் செயற்கைப் புன்னகை - உயிர்ப்பில்லாத ஓரிரண்டு சொற்கள், கம்பீரம் என்று நினைத்து கடுகடுப்பாய் இருக்கிற முகம் - இவையெல்லாம் உங்களை மேலும் அந்நியப்படுத்துவதோடு, இனந்தெரியாத எதிர்ப்புணர்வை ஏற்படுத்துகிறது. எனவே மனிதர்கள் உங்களிடமிருந்து தள்ளி நிற்பதோடு உங்களைப்பற்றிய எதிர்மறை எண்ணங்களையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். உங்களிடம் பயன்கருதிப் பழகுபவர்கள் மட்டுமே பணிந்தும் குழைந்தும் பேசுகிறார்கள்.
“பெருக்கத்து வேண்டும் பணிவு” என்கிறார் திருவள்ளுவர். “நிலை உயரும்போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்” என்கிறார் கண்ணதாசன். வாழ்க்கையைப் பற்றி ஆழமாக யோசித்தால், உங்களை சக்திமிக்க மனிதராக ஆக்கக்கூடிய அம்சங்கள் மூன்று என்று சொல்லத் தோன்றுகிறது. நமது நம்பிக்கை மாத இதழின் மனிதவள மேம்பாட்டு இயக்கமாகிய ‘சிகரம் உங்கள் உயரம்’ தொடங்கப்பட்டபோது, ஒவ்வொருவருக்கும் வேண்டிய அந்த மூன்று அம்சங்களையே அமைப்பின் நோக்கமாய் ஆக்கினோம்.
அந்த மூன்று அம்சங்கள் இவைதான்: பணம், பரிவு, பக்குவம்.
உங்களுக்கு வருகிற பணம், அடுத்தவர்களின் பொறாமையைத்தானே அதிகரிக்க முடியும்? உங்கள் ஆளுமையை எப்படி அதிகரிக்கும்? என்ற கேள்வி உங்களில் சிலருக்கு எழலாம்.
பணம் என்கிற முதல் விஷயத்தை நீங்கள் புத்திசாலித்தனமாக அணுகினாலேயே பரிவு - பக்குவம் ஆகியவற்றை நீங்கள் அடைந்துவிடுவீர்கள்.
ஓரளவு பணம் சேர்க்கத் தொடங்குகிறீர்கள். அந்தப் பணம் உங்களை நம்பிக்கைமிக்கவராக ஆக்குகிறது. வாழ்வின் அடிப்படைத் தேவைகளையும் தாண்டி அதிகமான சில தேவைகளையும் உங்களால் எளிதில் நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது. இந்தப் பணம், வாழ்க்கை மீதான நம்பிக்கையை அதிகரிக்கக்கூடிய ஒரு கருவி என்ற அளவில் அதற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்தால் போதும். சிலபேர், பணம் சம்பாதிப்பதற்கு வாழ்க்கை ஒரு கருவி என்று கருதிவிடுகிறபோது அவர்கள் கண்களைப் பணம் மறைக்கிறது. வாழ்க்கையில் உறவுகளை, உற்சாகத்தை, உணர்வுகளை எல்லாம் அடகுவைத்துவிடுகிறார்கள். அவர்களை அண்டிப் பிழைக்கும் சிலரைத் தவிர மற்றவர்கள் விலகி நிற்கிறார்கள். வெறுப்பாகப் பார்க்கிறார்கள்.
ஆனால், சில செல்வந்தர்களைப் பாருங்கள் - சமூகத்தின் எல்லாத் தரப்பினரும் அவர்களை ஆர்வமாய் நெருங்குகிறார்கள் - அன்பு செலுத்துகிறார்கள். என்ன காரணம்? அந்தப் பணக்காரர்கள், தங்களிடம் சேர்ந்த பணத்தை ஒன்றும் பார்ப்பவர்களுக்கெல்லாம் பகிர்ந்து கொடுப்பதில்லை. ஆனால், அந்தப் பணத்தால் தங்களுக்கு வாழ்க்கை மேல் ஏற்பட்ட நம்பிக்கையை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்கிறார்கள். தங்களால் முடிந்த அளவு பணத்தை பிறர் நலனுக்கு உதவினாலும், எல்லையே இல்லாத அளவுக்கு அடுத்தவர்கள்மேல் அக்கறை கொள்கிறார்கள். மனிதர்களை, அவர்களின் இப்போதைய நிலையை வைத்து எடைபோடாமல், மதித்துப் பழகுகிற பக்குவத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
பணம் சம்பாதிப்பதற்கு வாழ்க்கை ஒரு கருவியல்ல - வாழ்க்கையை வாழ்வதற்குத்தான் பணம் ஒரு கருவி என்று அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
இது பணத்திற்கு மட்டுமல்ல. உங்களிடம் இருக்கும் கூடுதல் திறமை எதற்கும் இது பொருந்தும். அறிஞர்கள், நம்மிடையே நிறைய உண்டு. சில அறிஞர்கள் அரங்கத்தில் பேசுகையில் அவர்களின் அபாரமான அறிவால் ஈர்க்கப்பட்டு, அருகே செல்பவர்கள், பழகிப்பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் விலகி வருவதுண்டு, என்ன காரணம்?
தங்கள் தனித்தன்மையான ஆற்றலைக் காரணமாக வைத்து மற்ற மனிதர்களிடமிருந்து விலகியிருக்கிற விசித்திரமான எண்ணம் அவர்களைத் தனிமைப்படுத்துகிறது.
சில அறிஞர்களோ, உரை நிகழ்த்தும்போது காட்டும் அதே அக்கறையையும், பக்குவத்தையும் தங்களிடமும் நெருங்கி வருபவர்களிடம் வெளிப்படுத்துவார்கள்.
பணம் என்பது உங்களிடம் இருக்கிற கூடுதல் சிறப்பம்சத்தின் குறியீடு. எல்லோரிடமும் நெருங்கிப் பழகினால், அவர்கள் கேட்கும் உதவிகளை எல்லாம் செய்ய வேண்டி வருமோ என்ற கவலையாலேயே சிலர் விலகி நிற்பதுண்டு. அதற்கு அவசியமில்லை. ஒருவர் உதவி கேட்கிறார் என்றால், அது நியாயமென்று பட்டு நீங்கள் உதவுகிற நிலையிலிருந்தால் உதவலாம். அல்லது நாசூக்காக மறுத்துச் சொல்லிவிடலாம்.
உங்களை ஆளுமைமிக்க மனிதராக செதுக்கிக்கொள்ள என்ன வழியென்று இப்போது வரைபடம் ஒன்றைப் போடலாம். முதல் விஷயம், உங்களை தனிப்பட்ட முறையில் தகுதிமிக்கவர் ஆக்கிக் கொள்வது. அது பொருளாதாரம் - சமூக மதிப்பு - செல்வாக்கு என்று எந்தத் தகுதியாகவும் இருக்கலாம். அதனை உங்கள் முயற்சியால் பெருக்கிக்கொள்வது.
இரண்டாவதாக, சக மனிதர்களிடமிருந்து உங்கள் தகுதிகளே உங்களை பிரித்துவிடாமல் பார்த்துக்கொள்வது. இதற்குத்தான் பரிவு என்கிற அம்சத்தைப் பற்றிப் பேசுகிறோம். அடுத்த மனிதரிடம் நீங்கள் பரிவு காட்டும்போது உங்களை நீங்களே கொஞ்சம் விரிவுபடுத்திக் கொள்கிறீர்கள். உங்கள் அடிப்படையான சக்தியின் எல்லை இன்னும் விரிவடைகிறது. எத்தனை எத்தனை மனிதர்களிடம் நீங்கள் பரிவு காட்டுகிறீர்களோ அந்த அளவுக்கு உங்கள் சக்தி விரிவடைந்து கொண்டே போகிறது.
இதன் விளைவாக உங்களுக்கு ஏற்படும் தன்மைக்குப் பக்குவம் என்று பெயர் சொல்கிறார்கள். உங்கள் செல்வம் - கல்வித்தகுதி - சமூகத்தில் உங்களுக்கிருக்கும் சிறப்பு நிலை எவற்றோடும் உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல், மேலும் பணிவுடன் எளிய மனிதராய் நடந்துகொள்கையில் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு - இந்தக் கட்டுரையில்கூட எழுதமுடியாத அளவுக்கு சூட்சுமமான உள்நிலை வளர்ச்சிகள் உங்களுக்கு உருவாகின்றன.
நீங்கள் பகட்டாக இருப்பதைவிட பணிவாக இருப்பது வசதியானது என்பதற்கு நகைச்சுவையான காரணம் ஒன்றை நான் சொல்வதுண்டு. உங்கள் பெருமைகளைப் பற்றி உங்களுக்கு ஒருபெருமித உணர்ச்சி இருக்குமானால் அதில் ஓர் அடிப்படை சிரமம் இருக்கிறது. சந்திக்கிற ஒவ்வொருவரிடமும் உங்களைப் பற்றி நீங்களே பேசவேண்டியிருக்கும். ஆனால் பலம் பொருந்திய நிலையில் இருந்தும் நீங்கள் பணிவோடும் பக்குவத்தோடும் நடந்துகொண்டால் ஒருவசதி இருக்கிறது. உங்கள் பெருமைகளை, உங்களைத் தவிர எல்லோரும் பேசுவார்கள்.
பணம் என்கிற ஒரு பலத்தை எப்படி விழிப்புணர்வோடும் விருப்பத்தோடும் சம்பாதிக்கிறீர்களோ, அதே விழிப்புணர்வோடும் விருப்பத்தோடும் பரிவு - பக்குவம் ஆகிய அருங்குணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் இருக்கிற இடத்தில் உங்களைச் சுற்றி அபரிதமான ஈர்ப்பு சக்தி உருவாகும். நீங்கள் நடமாடும் இடங்களில் உங்களைப் பற்றிய நல்லெண்ண அலைகள் தோன்றும். அவையே கவசமாய் இருந்து உங்களைக் காக்கும்.
உங்களையும் அறியாமல், உங்கள் செல்வாக்கு வட்டம் விரிவடைந்து கொண்டே போகும். உங்களைப் பற்றி யாரோ எங்கோ பேசிக் கொண்டார்கள் என்று உங்கள் காதுக்கு வருகிற செய்திகளில் பெரும்பான்மையானவை, உங்களைப் பற்றிய நல்ல விஷயங்களாகவே இருக்கும்.
மீண்டும் சொல்கிறேன். இது மந்திர சக்தியல்ல, மனித சக்தி. பணம் - பரிவு - பக்குவம் ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதை யார் உணர்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் வெற்றி!!
T