ஞாயிறு, 24 ஜனவரி, 2010

சிறந்த மாற்று குறும்படம் விருது 2009
கர்ண மோட்சம்






சிறந்த மாற்று சிந்தனையாளன் சிறப்பு விருது 2009
சுகந்தி ஆசிரியை .



சிறந்த மாற்று தொலைக்காட்சி நிகழ்ச்சி விருது -2009
சின்ன சின்ன ஆசை - மக்கள் தொலைக்காட்சி

சிறந்த மாற்று தொலைகாட்சி தொகுப்பாளினி விருது 2009
மக்கள் தொலைகாட்சி ஆர்த்தி


சிறந்த மாற்று அரசியல்வாதி விருது 2009
தமிழருவி மணியன்
சிறந்த மாற்று ஊடகம் விருது 2009
மக்கள் தொலைக்காட்சி



சிறந்த மாற்று சிந்தனையாளன் விருது 2009
விஜய் டிவி நீயா நானா புகழ் கோபிநாத்


வியாழன், 21 ஜனவரி, 2010


இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே!
14.01.2010
தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பாதுகாப்பாகவுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கை.எமது அன்பிற்குரிய தமிழீழ மக்களுக்கு.தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பற்றி இலங்கை அரசும், சில சர்வதேச சக்திகளினாலும் பரப்பப்பட்ட மாறுபட்ட தவறான தகவல்களை எமது இயக்கம் முற்றாக மறுக்கின்றது.தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மிகுந்த நலமுடனும் பாதுகாப்புடனும் உள்ளார். தேசியத் தலைவர் பற்றிய தவறான செய்திகளுக்கு எமது மக்கள் செவிசாய்க்காமல் எமது விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுக்கு வீறுடன் களம் அமைக்குமாறு வேண்டப்படுகின்றனர்.அதோடு தேசியத் தலைவர் அவர்கள் வெகுவிரைவில் மக்கள் முன் தோன்றி உரிய நேரத்தில் உரை நிகழ்த்துவார்.சர்வதேச ஒழுங்குகளுக்கு ஏற்ப எமது மக்களின் தற்போதைய நிலை, இலங்கை அரசின் நோக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்ட எமது தேசியத் தலைவர் விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வை புதிய வடிவில் நெறிப்படுத்தியுள்ளார்.எமது தாயக விடுதலைப் போராட்ட வரலாற்றில் பாரிய இழப்புக்களை எமது மக்களுடன் நாம் சந்தித்துள்ளோம்.இழப்புக்கள் என்பது எமக்கும் எமது மக்களுக்கும் புதியவைகள் அல்ல.சிங்கள அரசின் சிந்தனைகளைத் தாண்டி எமது விடுதலைப் போராட்டம் புதிய வடிவம் பெற்று வீறுடன் எழுந்து நிற்கின்றது.சிங்கள பேரினவாத அரசு எமத மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு மதிப்பளித்து எமது மக்களுக்கு சரியான தீர்வு திட்டத்தை முன்வைக்காத வரை சிங்கள பேரினவாதற்திற்கு எதிராக எமது விடுதலைப்போர் எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தலைமையில் மாறுபட்ட வடிவங்களுடன் தொடர்வதுடன்.எமது மக்களை ஏமாற்ற நினைக்கும் எந்த சக்தியினையும் நாம் அனுமதிக்கப்போவதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்ச.தமிழ்மாறன்செய்தி தொடர்பாளர்தமிழீழ விடுதலைப்புலிகள்தமிழீழம் .

புதன், 13 ஜனவரி, 2010


தமிழர்திருநாள் & பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

இராம.செங்குட்டுவன்..

சனி, 9 ஜனவரி, 2010

மனிதாபிமானமற்ற மிருகங்கள்

திருநெல்வேலி ஆழ்வார்குறிச்சி நகருக்கு வந்த தமிழகத்தின் இரண்டு அமைச்சர்களுக்கு பந்தோபஸ்துக்கு சென்ற காவல்துறை துணை ஆய்வாளார் கொடூரமாக வெட்டி கொள்ளப்பட்ட காட்சியை தொலைகாட்சியில் பார்த்திருப்பீர்கள்.... எதோ ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண வந்தவர்களைப்போல இரண்டு அமைச்சர்களும் வேட்டியை மடக்கி கட்டி கொண்டுதுணை ஆய்வாளார் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்ததை பார்த்த விதம் கேவலத்திலும் கேவலம் ... ஒரு மாநிலத்திற்கே சுகாதார துறைக்கு அமைச்சராக இருந்து கொண்டு ஒரு அரசு ஊழியரையே காப்பாற்றாத இவர் சாதாரண மக்களை எங்கே காப்பாற்ற போகிறார் ...எந்த நூதிஎட்டு இருந்து என்ன பிரயோசனம்...இதில் உச்ச கட்ட கேவலம் என்ன வென்றால் தேனியில் பரபரப்பான பஸ் ஸ்டாண்டில் பகல் நேரத்தில் பொது மக்களுக்கு எந்த முன்னரவிப்பும் இல்லாமல் காவல்துறை குன்டுவெடிப்பதை போலயும்உடனே மக்களை காப்பாற்ற படுவதை போலயும் தீயணைப்பு துறை மற்றும்காவல் துறை இணைந்து பயிற்சி நடத்தி இருக்கிறார்கள்...மக்கள் உண்மையிலேயே குண்டு வெடிப்பு நிகழ்ந்துவிட்டதென அலறி அடித்து ஓடியிருக்கிறார்கள் ...அட ஆபீசருங்களா... உங்க அலப்பறைக்கு ஒரு அளவே இல்லையா?....உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த ஒரு போலீஸ் அதிகாரியையே காப்பாற்ற முடியாத உங்களால் எப்படி மக்களை காப்பாற்ற முடியும் ?...

வெள்ளி, 1 ஜனவரி, 2010

தமிழர் திருநாள் & தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இராம.செங்குட்டுவன்
புதுவை