புதன், 19 மே, 2010

முத்துக்குமார் ஒரு தீவிரவாதிதான்-குழலி

முத்துக்குமாருக்கு சிலை திறப்பாம்கொளுத்திக்கொண்டவனுக்கு எவ்வளவு திமிர்காதல் தோல்வியால் தற்கொலைவேலை கிடைக்காதவிரக்தியில் தற்கொலைசம்பளம் பத்தாமல் தற்கொலைசொல்லியிருப்போம் ஆயிரம் கதை
நாசமாப்போனவன்கடிதம் எழுதிக்கொடுத்து விட்டுகொளுத்திக்கொண்டான் திமிர் பிடித்தவன்கடிதம் எழுதிய பொறம்போக்குபாப்பாத்தியை பற்றி மட்டும்எழுதிவிட்டுப்போக வேண்டியது தானேஐம்பது ஆண்டுகாலம் கட்டியெழுப்பியதமிழ் இனத்தலைவனையும்காட்டிக்கொடுத்துவிட்டானே
உடலை கைப்பற்றிஉணர்ச்சியை ஊட்டிஊரெங்கும் தம் பிணம் சுமந்துபுரட்சி செய்ய சொன்னானேஇவன் தீவிரவாதி இல்லையா?இவனுக்கு எப்படி சிலை எழுப்ப முடியும்?
உதயக்குமாரை உண்டு ஏப்பம்விட்டவர்களுக்குமுத்துக்குமாரை முழுங்கதெரியாதாடா முட்டாப்பயலே
கோர்ட்டு தீர்ப்புக்கும்கருத்துக்கணிப்புக்கும்அடுத்தவன் உயிரைஇழக்கவைக்கும் ஊரில்இனத்துக்காக தன் உயிரைஇழக்கிறானாம்இவன் தீவிரவாதி இல்லையா?இவனுக்கு எப்படி சிலை எழுப்ப முடியும்?
டாஸ்மாக்கில் பாஸ்மார்க்குவாங்கிக்கொண்டிருக்கும்எம் இனத்திற்க்குமானாட மயிலாடவில்மயிங்கிக்கொண்டிருக்கும்எம் இனத்திற்க்குபிரியாணி குஞ்சுகள் போதும்எங்களுக்கு வேண்டாம்முத்துக்குமார் போன்ற தீவிரவாதிகள்.
-குழலி

செவ்வாய், 18 மே, 2010

மன்னித்துவிடுங்கள் என் உறவுகளே


ஆண்டொன்று ஓடிவிட்டது! பருவங்கள் மட்டுமே மாறின.
பதவி, பவிசு, பட்டம், விழா, கொண்டாட்டம், இலவசம், பொய், துரோகம், பணம், மறதி, பழிவாங்கலில் எதுவுமே மாறவில்லை.
மானுடம் மறந்ததற்கான ஆண்டுவிழா இன்று.
பச்சைத்துரோகத்தின் பரிசாய் புதையுண்ட பல லட்சம் உயிர்களை மறந்துபோகவும் தலைப்பட்டோம். யார் சரி யார் தவறுக்கு அப்பாற்பட்டு அப்பாவியாய் அத்தனை உயிர்கள் போனது நிஜம். பச்சிளம் குழந்தைகள், முதியோர் என மொத்தமாய் செத்தவர்க்கு ஓர் அஞ்சலி சொல்லக்கூட மனமில்லை நம்மவர்க்கு.
பத்திரிகைகள் மறக்காமல் சத்தீஷ்கர் நிகழ்வுக்கு யாரையோ நினைவு கூறுகின்றன.
ஒரு புறம் நினைத்தால் அவமானமாய் உணர்கிறேன். மறுபுறம் நான் மட்டுமே இப்படியிருக்கிறேன். என் உறவுகள் தமிழுக்காய் இன்னும் தலை நிமிர்ந்தேயிருக்கிறார்கள் என்ற பெருமிதம் சற்றே ஆறுதலாயிருக்கிறது.
நிர்க்கதியாய் நிற்பவனை ஆயுதம் ஏந்தி ஒரு கூட்டம் மிரட்டுகிறதென்றால் உண்மையில் ஆயுதம் இருப்பது யாரிடம்? பயந்தவன் தானே மிரட்டுவான். ஏதிலி யார்? வலையம் வலையம் என்று முதலைக் கண்ணீர் விட்டோம். அவர்கள் சுதந்திரமாய் இருக்கிறார்கள். அல்லது சுதந்திரமாய் இல்லை என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.
சுதந்திரமாய் இருப்பதாய் மாயை கொண்டு கண்ணுக்குத் தெரியா இலவச, செய்தி இருட்டடிப்பு, போதையில் ஆழ்த்தும் தொலைக்காட்சிகள், மிரட்டல் என பல வலயங்களுக்குள் அகப்பட்டு உணராமல் இருக்கிறோமே! ஏதிலி யார்?
சென்ற வருடம் இருந்த பதட்டம், இயலாமை, எல்லாம் முடிந்த துக்கம் நெஞ்சை நிறைக்கிறது. நாகரீக உலகம் என்று மார்தட்டி நிற்கும் உலகலில், மறைந்தவனின் சமாதி கூட இடித்தொழிக்கப்படும் அவலம். க்ளோபல் வில்லேஜ் என்று பெருமை பொங்கும் உலகில் ஒரு மூதாட்டிக்கு அனுமதி மறுக்கும் மனிதநேயம்.
அதை வைத்து அரசியல் வியாபாரமாக்கும் அவலங்கள். இடது கையால் நீர் கொடுத்தமையால் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தவனின் பெருமையை எழுதிக் காசாக்கி உதவிக்கரம் நீட்டும் பொய்முகம்.
அடிமையாய் இருக்கும் நமக்கு அவர்களுக்கு ஆறுதல் சொல்ல தகுதியில்லை. அவர்களுக்கு அது தேவையும் இல்லை. தமிழ் மாறினாலும், தமிழர் புத்தாண்டு மாறினாலும், தலைஎழுத்தே மாறினாலும் எறியப்படும் எலும்புத்துண்டுக்கு அடிமையாகிவிட்டோம்.
எனக்கொரு வலைமனை இருக்கிறது. என்னால் இடுகையிட முடியும். இதற்கு மீறி ஏதும் செய்ய வழியற்ற, துணிச்சலற்ற ஒர் அடிமையாய் நானும் அதைத்தான் செய்கிறேன்.
மானத்துக்காய் உயிர்நீத்த அந்த தியாக உள்ளங்களுக்கு மானமற்ற ஒரு ஜீவனின் கண்ணீர் அஞ்சலி. மன்னித்துவிடுங்கள் என் uravugale..

ஞாயிறு, 16 மே, 2010

வெள்ளி, 14 மே, 2010

நாளை இதுவும் நடக்கலாம்











ரஞ்சிதா தி. மு. க வில் இணைந்தார்
தினமலர், தினத்தந்தி, தி ஹிந்து, தினகரன், கலைஞர் டிவி செய்திகளில் இந்த செய்தியை நாளை நீங்கள் கேட்கலாம் ..
நடிகை ரஞ்சிதா தமிழக முதல்வரும் தி. மு.க தலைவருமான திரு மு. கருணாநிதி அவர்கள் முன்னிலையில் தி.மு.க வில் இணைந்தார்.அவரை வாழ்த்தி வரவேற்று பேசிய கருணாநிதி அவர்கள் நித்யானாந்தவுடன் கடவுள் இல்லை என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு பகுத்தறிவை தமிழ்நாட்டில் வளர செய்த முற்போக்கு சிந்தனை கொண்ட ரஞ்சிதாவிற்கு தி.மு.க தான் சிறந்த இடம் அவரை வாழ்த்தி வரவேற்கிறேன். என்று குறிப்பிட்டார். தி.மு.க வில் இணைந்த ரஞ்சிதாவை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார். வேறு எந்த வேலையுமற்ற மந்திரிகள் துரைமுருகன், ஆர்க்காட்டார், பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம், பரிதி இளம்வழுதி ஆகியோர் சொல்லோழுவ உடன் இருந்தனர்.