திங்கள், 7 டிசம்பர், 2009

கருவறை

கருவறை

காமலீலைகளால் உருவாவது கருவறைகள் ...இன்று
கருவறைக்குள் உருவாகிறது காமலீலைகள் ....
ஆச்சாரம் அனுஷ்டானம் கோச்சாரம் எல்லாம்
இன்று அபட்சாரமாகிபோனது...

தமிழா ....

கருவறைக்குள் கவர்ச்சி நடிகையின்

சிலை வைத்து கோயில் கட்டிய உனக்கு..

பக்திப்பாடல்களில் கூட

பத்துபெண்களை விட்டு ஆடவிட்டால்தான்

பரவச நிலைஅடையும் உனக்கு
இதெல்லாம் என்ன ச்சும்மா .....

இராம. செங்குட்டுவன்


மக்கள் பணி
அவசர சிகிச்சை ஊர்தி உட்பட
அணைத்து போக்குவரத்தும் அரை மணி நேரம் முன்னாலேயே நிறுத்தப்பட்டு

கால் ஊனமுற்ற சிறுவனை, பள்ளி குழந்தைகளை

ரோட்டை கடக்க விடாமல் கால் கடுக்க நிற்க வைத்து
பலத்த பாதுகாப்புடன்?!?
கடந்து சென்ற
மந்திரி அன்று செய்த மகத்தான
மக்கள் பணி
ஓய்வு ........
இராம .செங்குட்டுவன்