செவ்வாய், 10 நவம்பர், 2009

நோ டீல்


வசதி படைத்தவர்களுக்கும் மேற்தட்டு மக்களுக்கும் மட்டுமே தேர்வு செய்து விளையாடும் டீல் நோ டீல் என்ற விளையாட்டு பொழுதுபோக்கு நிகழ்ச்சியை இப்போது சூர்யதொலைக்காட்சி ஒளிபரப்புகிறது .முற்றிலும் ஏழை எளிய மக்களும் நடுத்தர மக்களும் மட்டுமே பார்பதனால் வரும் வருமானத்தை ஆங்கிலம் பேச தெரிந்த மேற்தட்டு மக்களுக்கு மட்டும்இந்த விளையாட்டின் மூலம் லட்ச கணக்கில் பரிசாக தரும் இந்த தொலைக்காட்சிக்கு ஒரு பாமரனோ அல்லது ஒரு ஏழை விவசாயி கூடவா கிடைக்கவில்லை. நெடுந்தொடர்களை ஒளிபரப்பி முட்டாளாக்க மட்டும் இவர்களுக்கு ஏழை மக்கள் தேவை படுகிறார்கள் .கேள்வி கேட்டு பதில் சொல்லத்தான் இவர்களுக்கு படித்தவர்கள் தேவை.ஆனால் இந்த விளையாட்டில் ஒன்றிலிருந்து இருபத்தியாறுக்குள் ஒரு நம்பரை சொல்ல ஒரு ஊமையை கூட தேர்வு செய்யலாம் .இதில் கூடவா இவர்களுக்கு பாமர மக்களை தேர்வு செய்ய மனம் வரவில்லை .ஏழை பாழைகள் என்றும் முன்னேறி விட கூடாதென்று அவர்கள் முட்டாள்களாகவே எப்போதும் இருக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி செயல்படுவதில் தன் தாத்தாவை மிஞ்சி விடுவார்போல இந்த தொலைக்காட்சியின் உரிமையாளர் .

1 கருத்து:

  1. kon banega krorpati,koteeswaran kooda podhu arivu sambanthamana nigalchikalaga, indiavin thalaichirantha quiz master siddartha basu pondravargalal kelvigal thayarikkappattu ketkap pattatu. indru indha nilai..... enna seiya ellam program rating
    padithum paadu

    பதிலளிநீக்கு