வியாழன், 11 பிப்ரவரி, 2010

புதுவை அரசின் சிறந்த மாற்று திட்டம்



புதுவையில் கடந்த குடியரசு தினம் முதல் மாணவ- மாணவியர்கள் மட்டும் ஒரு ரூபாய் கட்டணத்தில் புதுவை முழவதும் பயணிக்க கூடிய தனிப்பட்ட பேருந்து வசதியினை புதுவை அரசு துவங்கியுள்ளது..இந்த திட்டம் உண்மையிலேயே வரவேற்க்ககூடிய ஒரு முன்னோடி மாற்று திட்டம் ஆகும்.. புத்தகமூட்டையைசுமந்து கொண்டு
மாணவர்கள் பொது பேருந்தில் பயணம் செய்வது அதிலும் கிராம புற மாணவர்கள் படும் அவதி சொல்லி மாளாது ..குழந்தைகளை படிக்க வைக்க வேண்டி கிராம புற மக்கள் நகரத்திற்கு இடம் பெயர்வதை இந்த நல்ல மாற்று திட்டம் தடுக்கும்..குழந்தைகளும் சிரமம் இன்றி பள்ளிக்கூடம் சென்று வரவும் படிப்பில் கவனம் செலுத்தவும் இந்த திட்டம் உதவும்...புதுவை ஒரு சிறிய மாநிலமாக இருப்பதால் இதை போன்ற மாற்று திட்டங்களை சோதனை முறையில் அமுல்படுத்தி அது மக்களிடையே வெற்றிபெற்றால் தொடர்ந்து செயல்படுத்தலாம். இதைபோல பிளாஸ்டிக் ஒழிப்பு , புதுவை நகரை தூய்மையாக வைத்திருக்க கடுமையான சட்டங்கள் ஆகியவற்றிலும் மாற்று திட்டங்களை கொண்டு வர முயற்சி எடுக்கவும், இந்த திட்டத்தை கொண்டு வந்தர்காகவும் புதுவை முதல்வருக்கு வாழ்த்துக்கள்..பேருந்து முதலாளிகளின் வலையில் விழுந்து விடாமல் தொடர்ந்து இந்த திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என புதுவை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக