சனி, 9 ஜனவரி, 2010

மனிதாபிமானமற்ற மிருகங்கள்

திருநெல்வேலி ஆழ்வார்குறிச்சி நகருக்கு வந்த தமிழகத்தின் இரண்டு அமைச்சர்களுக்கு பந்தோபஸ்துக்கு சென்ற காவல்துறை துணை ஆய்வாளார் கொடூரமாக வெட்டி கொள்ளப்பட்ட காட்சியை தொலைகாட்சியில் பார்த்திருப்பீர்கள்.... எதோ ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண வந்தவர்களைப்போல இரண்டு அமைச்சர்களும் வேட்டியை மடக்கி கட்டி கொண்டுதுணை ஆய்வாளார் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்ததை பார்த்த விதம் கேவலத்திலும் கேவலம் ... ஒரு மாநிலத்திற்கே சுகாதார துறைக்கு அமைச்சராக இருந்து கொண்டு ஒரு அரசு ஊழியரையே காப்பாற்றாத இவர் சாதாரண மக்களை எங்கே காப்பாற்ற போகிறார் ...எந்த நூதிஎட்டு இருந்து என்ன பிரயோசனம்...இதில் உச்ச கட்ட கேவலம் என்ன வென்றால் தேனியில் பரபரப்பான பஸ் ஸ்டாண்டில் பகல் நேரத்தில் பொது மக்களுக்கு எந்த முன்னரவிப்பும் இல்லாமல் காவல்துறை குன்டுவெடிப்பதை போலயும்உடனே மக்களை காப்பாற்ற படுவதை போலயும் தீயணைப்பு துறை மற்றும்காவல் துறை இணைந்து பயிற்சி நடத்தி இருக்கிறார்கள்...மக்கள் உண்மையிலேயே குண்டு வெடிப்பு நிகழ்ந்துவிட்டதென அலறி அடித்து ஓடியிருக்கிறார்கள் ...அட ஆபீசருங்களா... உங்க அலப்பறைக்கு ஒரு அளவே இல்லையா?....உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த ஒரு போலீஸ் அதிகாரியையே காப்பாற்ற முடியாத உங்களால் எப்படி மக்களை காப்பாற்ற முடியும் ?...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக